இந்திய சினிமா வரலாறு – 4

இந்திய சினிமா – ஓர் உற்று நோக்கல்
புராணப்படங்கள் ஏன்? – பி.கே.நாயர்

ஒரு நெடு நாளையக் கனவு

மேநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட “கிருஸ்துவின் வாழ்க்கை “ என்ற திரைப்படத்தைப் பார்த்த நாளிலிருந்தே, நமது புராணங்களில் காணப்படும் கிருஷ்ண பகவானின் கதை பால்கேயின் பிரியமான ஒன்றாக இருந்து வந்தது. அப்போது முதலே பகவான் கிருஷ்ணனின் கதையை, நவீன கலைவடிவமான திரைப்படத்தின் மூலம் தயாரித்தளிக்க வேண்டுமென்ற எண்ணம் அவரை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டது.

அந்தப் பிடிவாதத்தின் விளைவே அவரது “ஸ்ரீகிருஷ்ண ஜன்மா” (1918) மற்றும் அதன் தொடர்ச்சியான “காவிய மார்த்தனம் (1919)” என்ற இருபடங்களும் !